வாஷிங்டன்: கடந்த நவம்பர் மாதம் டில்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு வீரமங்கை விருதை அமெரிக்ககா வழங்குகிறது. வரும் சர்வேதச பெண்கள் தினமான 8ம் தேதியன்று வாஷிங்டனில் நடக்கும் விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா மனைவி மிக்சேல் ஒபாமா வழங்குகிறார்.
ஆண்டுதோறும் பெண்கள் தினத்தன்று பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக சர்வேதச அளவில் 10 பெண்களை தேர்வு செய்யப்படுவர். இதன் படி 10 பெண்கள் பட்டியலில் டில்லி மருத்துவமாணவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் ஓடும் பஸ்சில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்தனர். இந்நேரத்தில் இந்த மாணவி தனது கற்பை காப்பாற்ற கடுமையாக போராடினார். இந்த கும்பலுடன் ஏற்பட்ட தாக்குதலில் கொடுங்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்தது. இதில் டில்லி நகரமே ஸ்தம்பித்து போனது. இந்த சம்பவத்திற்கு பின்னர் கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு சட்டம் கடுமையாக்கப்பட்டது.
மத்திய அரசின் உதவியுடன் சிங்கப்பூரில் வைத்து சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாணவி இறந்தார். இந்நிலையில் அவரது வீரப்போராட்டத்தை பாராட்டி வீரமங்கை விருதை அமெரிக்க அரசு வழங்குகிறது. இந்த விருதை மாணவியில் பெற்றோர்கள் சார்பில் அமெரிக்காவில் பெறுவர்.
அமெரிக்க விருதை பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான நஜ்மல் ஹெப்துல்லா வரவேற்றுள்ளார்.
tags:டில்லியில் ஓடும் பஸ்சில், மாணவி
Post a Comment