FLASH NEWS :
Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

இந்தியாவை எச்சரிக்கவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ஜெ., குற்றச்சாட்டு


சென்னை,தமிழக மீனவர்கள்,முதல்வர் ஜெயலலிதா
சென்னை: "சர்வதேச அளவில், தனக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்க, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தின் கேடியக்கரை பகுதியில், நாகபட்டனம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த, 14 மீனவர்கள், இரண்டு மோட்டார் படகுகளில், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் மீது, இலங்கை கடற்படை, கடந்த, 6ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில், காரைக்காலை சேர்ந்த மீனவர் செண்பகம் காயம் அடைந்தார். இவரை, உடன் சென்ற மீனவர்கள், நாகபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இலங்கை கடற்படையினர், அப்பாவி தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன், தூத்துக்குடி மீனவர்கள், 16 பேரை பிடித்துச் சென்று, கோர்ட் காவலில் வைத்துள்ளனர். அமைதியான முறையில் வாழ்வாதரத்தைத் தேடும், தமிழக மீனவர்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற் காக, இலங்கை கடற்படை, இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய, நடத்தி வரும் தாக்குதல்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, சர்வதேச விசாரணை வேண்டும் என, தமிழக அரசியல் கட்சிகள், இந்திய பார்லிமென்டில் வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில், தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அரசு தாக்குதல் நடத்தியுள்ளதில், பின்னணி இருப்பதாக கருதப்படுகிறது. ஈழத் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு, சர்வதேச அளவிலான விசாரணையை, இந்திய அரசு கேட்கக் கூடாது என்று எச்சரிப்பதற்காக, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாகவே தெரிகிறது. இலங்கையின் இப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்னையில், மத்திய அரசு மவுன பார்வையாளராக இருக்கக் கூடாது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை, ராணுவத்தின் மூலம் பறிப்பதை நிறுத்த வேண்டும் என, இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்; உறுதியான நடவடிக்கை, உடனடியாகத் தேவை. இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.


tags:சென்னை,தமிழக மீனவர்கள்,முதல்வர் ஜெயலலிதா

400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்கு தோரியம


மின்சாரம்,அணு மின்நிலையம்,பெட்ரோல், டீசல்
தேனி: ""நம்நாட்டில், 400 ஆண்டுக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான தோரியம், தமிழக, கேரள கடலோரங்களில் குவிந்து உள்ளன,'' என, பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி, டேனியல் செல்லப்பா தெரிவித்தார்.
தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன், கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர் கூறியதாவது: நீர், அனல் மின்நிலையங்கள் சில ஆண்டுகளுக்கு மட்டுமே பலன் தரக்கூடியவை. இன்னும் சில ஆண்டுகளில், இந்த மின்நிலையங்களை செயல்படுத்த முடியாது; அணு மின்நிலையம், அப்படியல்ல. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை அணு சக்தி மூலம் பெற முடியும். அமெரிக்காவில், சராசரியாக ஒரு நபர், ஆண்டிற்கு 12 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறார்; ஐரோப்பிய நாடுகளில், 6,000 யூனிட் பயன்படுத்துகின்றனர்; நம் நாட்டில், ஒரு நபர் 660 யூனிட் மட்டுமே பயன்படுத்துகிறார். இந்த தேவைக்கு கூட, மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. அனல், நீர் மின்நிலையங்கள் மூலம், தமிழகத்திற்கு தினமும் 5500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது; மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட் கிடைக்கிறது. தினமும் 3500 மெகாவாட்டிற்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, அணுமின்சாரமே எளிதானது. கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி கடற்கரை பகுதிகளிலும், கேரளா ஜாராகுஷா கடற்கரையிலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் தோரியம் அதிகம் உள்ளது. தோரியத்தை, யுரேனியமாக மாற்றி மின்சாரம் தயாரிக்கலாம்.
வரும் 400 ஆண்டுகளுக்கு, நம் நாட்டின் தேவைக்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்கும் அளவில், தோரியம் இருப்பு உள்ளது. அதிக மின்சாரம் தயாரிக்கப்படும் போது, பெட்ரோல், டீசல் தேவையை குறைத்துக் கொள்ள முடியும். மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். அணுமின் சக்தி மூலம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு எளிதான தீர்வு காண முடியும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் அணு, சிறந்த தொழில்நுட்பமாக மாறி வருகிறது. அணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த முடியும். எதிர்காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் கட்டிக்கொண்டு அலைய நேரிடலாம். இவ்வாறு பேசினார். கல்லூரி செயலாளர் தாமோதரன், முதல்வர் ராஜாமணி, துணை முதல்வர் துரைக்கண்ணன் பங்கேற்றனர்.


tags:மின்சாரம்,அணு மின்நிலையம்,பெட்ரோல், டீசல் 

வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி வீணாகும் அவலம்


தமிழகம் முழுவதும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி, யாருக்கும் பயனின்றி வீணாகிறது.
தமிழகத்தில், 12,500 வருவாய் கிராமங்கள் உள்ளன. 1981ம் ஆண்டு, ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும், ஒரு கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது, 9,000 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டும் பணிபுரிகின்றனர். ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். கிராம நிர்வாக அலுவலர்களுக்காக, வருவாய் கிராமத்தில், வளர்ச்சி திட்டப்பணி மூலம், அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கிராம கணக்குகளை பாதுகாக்கவும், பொதுமக்கள் வந்து செல்லவும், அரசு திட்டங்களை செயல்படுத்தவும், அலுவலகம் பயனுள்ளதாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக, கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ்:

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான, ஜாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு, இறப்பு, சொத்து மதிப்பு போன்ற சான்றிதழ்களைப் பெறவும், உட்பிரிவு பட்டா, பட்டா பெயர் மாற்றம், சிட்டா, கணிணி பட்டா ஆகியவற்றை பெற, கிராம நிர்வாக அலுவலர்களை அணுக வேண்டியுள்ளது. அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில், வட்டாட்சியர் அலுவலகத்தில், சானறிதழ்கள் வழங்கப்படும். எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள், தினமும் கிராமத்திற்கு செல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர், கிராமங்களில் புலதணிக்கை செய்யும் போது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர், கிராம கணக்குகளுடன் செல்ல வேண்டும். தேவைப்படும் போது, கணக்குகளை உயர் அதிகாரிகளுக்கு காண்பிக்க வேண்டும். எனவே, அடிக்கடி ஆவணங்களை வெளியில் எடுத்து செல்லுவதும், திரும்ப கொண்டு வருவதும் சிரமமாக இருந்தது.
மடிக்கணினி விநியோகம்:

இப்பிரச்னைக்கு தீர்வுகாண, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, அரசு மடிக்கணினி வழங்கியது. அத்துடன், பிரின்டரும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு மடிக்கணினி பயன்பாடு குறித்து, பயிற்சியும் அளிக்கப்பட்டது. மடிக்கணினி வழங்கப்பட்டு ஓராண்டாகியும், கிராம கணக்குகள் குறித்த விபரம் இதுவரை, மடிக்கணினியில் பதிவு செய்யப்படவில்லை; "நெட்ஒர்க்' இணைப்பும் வழங்கப்படவில்லை. இதனால், கிராம நிர்வாக அலுவலர்கள், மடிக்கணினி இருந்தும், பழைய கணக்குகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது: மடிக்கணிணி மற்றும் பிரின்டர் கொடுத்த வருவாய் துறையினர், பயன்பாடு குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள், எந்த ஆவணத்தையும், வட்டாட்சியருக்கு, ஆன்லைன் மூலம் நேரடையாக தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தவில்லை; வருவாய் ஆய்வாளர் மூலமாகத் தான் தெரிவிக்க வேண்டி உள்ளது. ஆனால், வருவாய் ஆய்வாளருக்கு மடிக்கணிணி வழங்கவில்லை; இதனால், மடிக்கணினி பயனில்லாமல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராஜபக்சே தலைக்கு ரூ.1 கோடி பரிசு: மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

ராஜபக்சே, பரிசு, மதுரை
மதுரை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாகவும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமியை தமிழகத்தில் யார், எங்கு பார்த்தாலும், அவரை அந்த இடத்திலேயே அடிக்க வேண்டும் என்றார். முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் இறுதிக் கட்ட போரில் பங்கேற்ற இலங்கை ராணுவ தளபதிகள் உள்ளிட்டோரை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி தமிழகத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் மூலமாக உரிய நிவாரணம் பெற்றுத்தர இந்தியா முயற்சிக்க வேண்டும். சர்வதேச உண்மை கண்டறியும் குழுவை இலங்கைக்கு அனுப்பி, 2009ம் ஆண்டிலிருந்து அங்கு நிகழ்ந்த போர்க்குற்ற அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

tags:ராஜபக்சே, பரிசு, மதுரை

 
Support : Copyright © 2011. தற்சமயம் பராமரிப்பு பணியில் உள்ளது. - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger