FLASH NEWS :
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தாமதம்: ஏப்ரல் மாதம் துவங்கும் என மத்திய அரசு தகவல்


கூடங்குளம் ,அணு மின் ,புதுடில்லி:
புதுடில்லி: ""கூடங்குளம் அணு மின் நிலையத்தில், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, மின் உற்பத்தி துவங்கும்,'' என, மத்திய அமைச்சர், நாராயணசாமி கூறினார்.
லோக்சபாவில் நேற்று, பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர், நாராயணசாமி, எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: தமிழகத்தின், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தின், முதல் மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் செயல்படத் தயார் நிலையில் உள்ளன. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம், முழு அளவிலான பரிசோதனைகளை நடத்தி, முதல் யூனிட் செயல்படுவதற்கு, ஜனவரி, 24ம் தேதி ஒப்புதல் அளித்தது. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளுடன், இந்திய அணுசக்தி கழக லிட்., அதிகாரிகள் இணைந்து, ஒருங்கிணைந்த பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். இந்த குழுவினர், இதற்காக, ஒன்றரை மாதமாக முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் யூனிட், வரும், ஏப்ரல் மாதத்திலிருந்து மின் உற்பத்தியை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது யூனிட், வரும் அக்டோபரில் மின் உற்பத்தியை துவங்கும். இந்த இரண்டு யூனிட்டுகளிலும், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இவற்றில், 925 மெகாவாட் மின்சாரம், தமிழகத்துக்கும், 266 மெகாவாட் மின்சாரம், கேரளாவுக்கும், 442 மெகாவாட் மின்சாரம், கர்நாடகாவுக்கும் வழங்கப்படும். புதுச்சேரிக்கு, 67 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்துக்கு, கூடுதலாக, 100 மெகாவாட் மின்சாரம் வழங்குவது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. கடலோர பகுதிகளில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களில், அதி நவீன தொழில்நுட்பத்துடன், அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நில நடுக்கம், சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால், அணுமின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வு செய்வர். இந்த ஆய்வு, சர்வதேச தரத்திலானதாக இருக்கும். பாதுகாப்புக்கு தேவையான அனைத்து விஷயங்களையும், பலப்படுத்தவும், செயல்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நாராயணசாமி அளித்த பதிலில் கூறப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள், கடந்த டிசம்பரில் ஆய்வு நடத்தினர். மின் நிலையத்தில் உள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில கருவிகளில், சிறிய அளவிலான கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. "பிப்ரவரியில் மின் உற்பத்தி துவங்கும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பிரச்னை காரணமாக, திட்டமிட்டபடி, மின் உற்பத்தியை துவங்க முடியவில்லை. தற்போது, "ஏப்ரல் மாதம் முதல், மின் உற்பத்தி துவங்கும்' என, முறைப்படி, லோக்சபாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.


tags:கூடங்குளம் ,அணு மின் ,புதுடில்லி:

ஹெலிகாப்டர் ஊழல்: மாஜி தளபதி தியாகியிடம் நாளை சிபிஐ விசாரணை- சகோதரர்களிடம் இன்று விசாரணை


டெல்லி,ஹெலிகாப்டர், சிபிஐ விசாரணை
டெல்லி: விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகியிடம் நாளை சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. அதற்கு முன்பாக இன்று தியாகியின் சகோதரர்கள் மூவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தியாகியின் சார்பில் இவர்கள்தான் லஞ்சப் பணத்தை வாங்கினார்கள் என்பது குற்றச்சாட்டு. அதுதொடர்பாக இந்த மூவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
தியாகியிடம் நாளை சிபிஐ விசாரணை நடைபெறவுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்கனவே மறுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட தியாகியின் சகோதரர்களான ஜூலி, ராஜீவ் மற்றும் டோஸ்கா தியாகி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்து வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டு இத்தாலியின் பின்மெக்கானிகா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேன்ட்டிடமிருந்து ரூ. 4000 கோடி மதிப்பிலான 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முயற்சி மேற்கொண்டது இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக இத்தாலியில் சர்ச்சை கிளம்பியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய இத்தாலிய அதிகாரிகள், முன்னாள் விமானப்படைத் தலைவர் எஸ்.பி.தியாகியின் சகோதரர்கள்தான் இதில், தியாகி சார்பில் இடைத்தரகர்களிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றதாக குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒரு இடைத்தரகரான குய்டோ ஹெஸ்கி இதுகுறித்து கூறுகையில்,தியாகியின் சகோதரர்களிடம் 1 லட்சம் ஈரோ பணத்தைக் கொடுத்ததாக தெரிவித்தார். இப்பணத்தின் ஒரு பகுதி தியாகியிடமே நேரடியாகப் போய்ச் சேர்ந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இதை தியாகி மறுத்துள்ளார். தான் ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது அவரது வாதமாகும். ஆனால் ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ ஆணித்தரமாக கூறியுள்ளது.


tags:டெல்லி,ஹெலிகாப்டர், சிபிஐ விசாரணை 

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!

முகேஷ் அம்பானி,இந்திய பணக்காரர்கள்

டெல்லி: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி.
உலகப் பெரும் பணக்காரர்களை அவர்களின் சொத்து மதிப்பின்படி பட்டியலிடும் 'போர்ப்ஸ்' பத்திரிகை இந்த ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.
முதல் 21 இடங்களில் இந்திய கோடீஸ்வரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

tags:முகேஷ் அம்பானி,இந்திய பணக்காரர்கள்
 
Support : Copyright © 2011. தற்சமயம் பராமரிப்பு பணியில் உள்ளது. - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger